search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனமழையால் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு - 3500 பேர் வெளியேற்றம்
    X

    கனமழையால் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு - 3500 பேர் வெளியேற்றம்

    கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, 3500க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #KarnatakaRain #FloodHitKodagu
    பெங்களூரு:

    தென் மாநிலங்களில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கேரள மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்திருப்பதால் அந்த மாநிலம் பேரிழிப்பை சந்தித்துள்ளது.



    இதேபோல் கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 800க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநில அதிகாரிகளுடன், ராணுவ வீரர்கள் மற்றும் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    கனமழையால் குடகுவில் உள்ள ஹாரங்கி அணை நிரம்பி உள்ளது. முதல்வர் குமாரசாமி, நேற்று அணையை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு உள்ளிட்ட மாவட்டங்களி​ல் ஆய்வு  செய்தார். குடகு மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 3500க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டிருப்பதாக முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது.  #KarnatakaRain #FloodHitKodagu
    Next Story
    ×