search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள மக்களின் சோகத்தில் பங்கெடுத்துவரும் அனைத்து மக்களையும் பாராட்டுகிறேன் - மோடி நெகிழ்ச்சி
    X

    கேரள மக்களின் சோகத்தில் பங்கெடுத்துவரும் அனைத்து மக்களையும் பாராட்டுகிறேன் - மோடி நெகிழ்ச்சி

    வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நிலைகுலைந்துள்ள கேரள மக்களின் சோகத்தில் பங்கெடுத்துவரும் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாராட்டுகிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #KeralaRains #KeralaFloods #StandWithKerala #PMModi
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பெருஞ்சேதங்களை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி உடனடி நிவாரணமாக 500 கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்தார்.

    பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளதாவது:-

    இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்த்து போராடும் கேரள மக்களின் மனவலிமைக்கு தலை வணங்குகிறேன். எதிர்மறையான இந்த நிலைமையிலும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுவரும் அதிகாரிகளுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.



    மேலும், எதிர்பாராத இந்த சோகத்தில் கேரளாவுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஒருமைப்பாட்டுடன் ஒட்டுமொத்தமாக பரவலான ஆதரவை தெரிவித்துவரும் நாட்டு மக்களை பாராட்டுகிறேன்.

    அபாயகரமான இடங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு முன்னுரிமை தந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், எல்லை பாதுகாப்பு படையினர், மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான உதவிகளை விமானப்படை, ராணுவம், கடற்படை மற்றும் கடோலர காவல் படையினர் செய்து வருகின்றனர்.

    கேரளாவுக்கு உடனடி தேவையான நிதி, உணவு தானியங்கள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசியமான உள்கட்டமைப்பு பணிகளில் உதவுமாறு தேசிய நெடுஞ்சாலை துறை, தேசிய அனல் மின் நிலையம், மத்திய மின் தொகுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிரதம மந்திரியின் அவாஸ் யோஜானா, மகாத்மா காந்தி தேசிய புறநகர் வேலைஉறுதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்தும் முன்னுரிமை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உறவினர்களை இழந்த குடும்பத்தாருடன் எனது நினைவுகள் இணைந்துள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். கேரள மக்களின் பாதுகாப்புக்காகவும், நல்வாழ்வுக்காகவும் நாம் அனைவரும் பிரார்த்தித்து கொள்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods #StandWithKerala #PMModi
    Next Story
    ×