search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் - ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்
    X

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் - ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தை ஜெய்ப்பூரில் இருந்து இன்று தொடங்குகிறார் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். #RajasthanAssemblyElection #RahulGandhi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, பாஜக சார்பில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் கவுரவ் யாத்திரை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தை ஜெய்ப்பூரில் இருந்து இன்று தொடங்கிறார் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

    இது தொடர்பாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சச்சின் பைலட் கூறுகையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபைதேர்தல் நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தலைநகர் ஜெய்ப்பூரில் தேர்தல் பிரசார யாத்திரையை இன்று தொடங்குகிறது. இதற்கான பிரத்யேக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElection #RahulGandhi
    Next Story
    ×