என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரம் - குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு
Byமாலை மலர்9 Aug 2018 9:40 AM GMT (Updated: 9 Aug 2018 9:40 AM GMT)
அசாம் மாநிலத்தின் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடியரசுத்தலைவரிடம் இன்று எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர். #AssamNRC #RamNathKovind
புதுடெல்லி:
வங்காளதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் இறுதி வரைவு அறிக்கையில், 40 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போதைய நிலையில் இந்த 40 லட்சம் பேரும் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள்.
இந்த விவகாரம் கடும் சர்ச்சைக்குள்ளானது. மேலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் இந்தியர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்க குடியரசுத்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவரிடம் இன்று மனு அளித்தனர். #AssamNRC #RamNathKovind
வங்காளதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் இறுதி வரைவு அறிக்கையில், 40 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போதைய நிலையில் இந்த 40 லட்சம் பேரும் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள்.
இந்த விவகாரம் கடும் சர்ச்சைக்குள்ளானது. மேலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் இந்தியர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்க குடியரசுத்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவரிடம் இன்று மனு அளித்தனர். #AssamNRC #RamNathKovind
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X