என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
14 வயது சிறுமியின் தொண்டையில் 9 ஊசிகள் - போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்
Byமாலை மலர்1 Aug 2018 11:29 AM GMT (Updated: 1 Aug 2018 11:29 AM GMT)
14 வயது சிறுமியின் தொண்டையில் உணவுக்குழாயை சுற்றி இருந்த 9 ஊசிகளை மருத்துவர்கள் மிக கவனமாக அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலம் கிரிஷ்னாகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கடும் தொண்டை வலி காரணமாக கடந்த திங்கள் அன்று அங்குள்ள நில் ரதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாய்பேச முடியாமல் இருந்த அந்த சிறுமியின் தொண்டை பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தொண்டையில் உணவுக்குழாயை சுற்றிலும் 9 ஊசிகள் இருந்துள்ளன. இதனை அடுத்து, சுமார் 4 மணி நேரம் மிக கவனமாக அறுவை சிகிச்சை செய்து ஊசிகளை வெளியே எடுத்து சிறுமியை காப்பாற்றினர். எனினும், ஊசி எப்படி தொண்டைக்குள் சென்றது என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.
சிறுமியின் குடும்பத்தினர் இது தொடர்பாக எந்த தகவலும் கூற மறுக்கின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், விளையாட்டுத்தனமாக அந்த சிறுமி ஊசியை விழுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X