search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க தயார் - பிரதமர் மோடி
    X

    முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க தயார் - பிரதமர் மோடி

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க தயார் என்பதால் எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.#pmmodi #parliamentarymonsoonsession
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது.

    மழைக்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை
    தொடங்கியது. அடுத்த மாதம் 10-ம் தேதியுடன் முடிகிறது. மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெறும்.

    இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
     
    நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று அமைதியாக நடைபெற வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய பிரச்சனைகல் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

    மேலும், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    #pmmodi #parliamentarymonsoonsession
    Next Story
    ×