search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2,500 அபராதம் - கோவா முதல் மந்திரி அதிரடி
    X

    பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2,500 அபராதம் - கோவா முதல் மந்திரி அதிரடி

    பொது இடங்களில் மது குடித்தால் அபராதமாக 2500 ரூபாய் வசூலிக்கப்படும் என கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் அதிரடியாக அறிவித்துள்ளார். #ManoharParrikar
    பனாஜி:

    கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் இனி மது குடித்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். அப்படி யாராவது மது குடிப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 2500 ரூபாய் அபராதம்  விதிக்கப்படும். இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
    Next Story
    ×