search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி கூட்டத்தில் கூடாரம் சரிந்த விவகாரம் - மேற்கு வங்காள அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு
    X

    மோடி கூட்டத்தில் கூடாரம் சரிந்த விவகாரம் - மேற்கு வங்காள அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

    மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது மத்திய அரசு. #PMModi
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் மிட்னாபூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் உரையாற்றிய போதே, பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

    இதில் பலர் சிக்கிக் கொண்டனர். 90-க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி நேரில் சென்று பார்த்து ஆறுதல் ஆறுதல் கூறினார். 

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கூடாரம் சரிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது மத்திய அரசு.

    இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்காள் மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம் என தெரிவித்தனர்.
    Next Story
    ×