என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை - அகிலேஷ் யாதவ் விமர்சனம்
Byமாலை மலர்10 July 2018 11:01 AM GMT (Updated: 10 July 2018 11:01 AM GMT)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்றே இல்லை என அம்மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #AkhileshYadav
லக்னோ :
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி ஜான்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். பணம் பறிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக முன்னா பஜ்ரங்கியை பக்பத் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக அவர், ஜான்சி சிறைச்சாலையில் இருந்து பாக்பத் மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து நேற்று காலை கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வெளியே அழைத்து வந்த முன்னாவை மற்றொரு கைதி சுட்டுக்கொன்றான். இந்த சம்பவம் சிறை வளாகத்தில் திடீர் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் டுவிட்டரில் விமர்சித்துள்ளதாவது :-
தற்போது உ.பி.யில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை. சிறையில் அடைத்தாலும், தங்கள் எதிரியை கொன்றுவிட முடியும் என குற்றவாளிகள் நம்பிக்கையாக உள்ளனர். மாநிலம் முழுவதும் ஒருவித பீதி நிலவுகிறது. இதைபோன்ற ஒரு மோசமான ஆட்சியையும், குழப்பத்தையும் இம்மாநிலம் இதுவரை கண்டதில்லை.
இவ்வாறு உ.பி.யில் ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசை அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #AkhileshYadav
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாபியா கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி ஜான்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். பணம் பறிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்காக முன்னா பஜ்ரங்கியை பக்பத் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக அவர், ஜான்சி சிறைச்சாலையில் இருந்து பாக்பத் மாவட்ட சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து நேற்று காலை கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்காக வெளியே அழைத்து வந்த முன்னாவை மற்றொரு கைதி சுட்டுக்கொன்றான். இந்த சம்பவம் சிறை வளாகத்தில் திடீர் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் டுவிட்டரில் விமர்சித்துள்ளதாவது :-
தற்போது உ.பி.யில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லை. சிறையில் அடைத்தாலும், தங்கள் எதிரியை கொன்றுவிட முடியும் என குற்றவாளிகள் நம்பிக்கையாக உள்ளனர். மாநிலம் முழுவதும் ஒருவித பீதி நிலவுகிறது. இதைபோன்ற ஒரு மோசமான ஆட்சியையும், குழப்பத்தையும் இம்மாநிலம் இதுவரை கண்டதில்லை.
இவ்வாறு உ.பி.யில் ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசை அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #AkhileshYadav
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X