search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்கத்தில் பாஜக பேரணி - பிரதமர் மோடி அடுத்த வாரம் பங்கேற்கிறார்
    X

    மேற்கு வங்கத்தில் பாஜக பேரணி - பிரதமர் மோடி அடுத்த வாரம் பங்கேற்கிறார்

    மேற்கு வங்க மாநிலத்தின் மிட்னாப்பூரில் ஜூலை 16-ம் தேதி நடைபெறவுள்ள பா.ஜ.க. பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். #BJP #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியின் கீழ் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் நடக்க உள்ள மெகா பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    அந்த பேரணியில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து உத்தரவிட்டது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து உரையாற்ற உள்ளார் என பா.க.ஜ.வினர் தெரிவித்துள்ளனர். #BJP #PMModi
    Next Story
    ×