search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
    X

    உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

    உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிதண்டா பகுதியில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. #Uttarakhand
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நைனிதண்டா பகுதியில் இன்று காலை பௌனில் இருந்து ராம்நகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

    சுமார் 60 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில், இதுவரை 47 பயணிகள் வரை உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். #Uttarakhand
    Next Story
    ×