search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெய்ப்பூர்-மும்பை இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    ஜெய்ப்பூர்-மும்பை இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    ஜெய்ப்பூரில் இருந்து இன்று மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அதிகாரிகளிடையே பதற்றம் ஏற்பட்டது. #IndiGoBombThreat
    ஜெய்ப்பூர்:

    குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இண்டிகோ விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் இண்டிகோ கால் சென்டருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

    அதில் பேசிய மர்ம நபர், ஜெய்ப்பூரில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

    விமானம் ஏற்கனவே புறப்பட்டுவிட்டதால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். எனினும், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சிறப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போதிய பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் மிரட்டல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.  #IndiGoBombThreat
    Next Story
    ×