search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் பெண்கள் கல்லூரி  விடுதியில் பீதியை ஏற்படுத்திய ராட்சத பல்லி
    X

    டெல்லியில் பெண்கள் கல்லூரி விடுதியில் பீதியை ஏற்படுத்திய ராட்சத பல்லி

    டெல்லியில் உள்ள கல்லூரியின் பெண்கள் விடுதியில் வினோதமான ராட்சத பல்லி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி :

    டெல்லியில் நேதாஜி சுபாஸ் தொழில் நுட்ப கல்லூரியில் உள்ளது. அடர்ந்த மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த கல்லூரியின் பெண்கள் விடுதியில் மே 16-ம் தேதி அன்று நுழைந்த ராட்சத பல்லியின் புகைப்படத்தை கிருத்திகா அனுராகி என்ற மாணவி புகைப்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அன்றைய தினம் டெல்லியில் கடும் புயல் வீசிய காரணத்தினால் அந்த பல்லி பெண்களின் விடுதியில் நுழைந்துள்ளது.

    மொத்தம் மூன்று மாடிகளை உடைய பெண்களின் விடுதியின் ஒரு குறிப்பிட்ட அறையில் இருக்கும் கழிவறையில் அந்த ராட்சத பல்லி காலை 11.30 மணியளவில் நுழைந்துள்ளது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவிகள் கழிவறையின் உள்ளேயே வைத்து பல்லியை பூட்டியுள்ளனர். 

    அதன் பின்னர், அந்த பல்லி வேறொறுவர் உதவியுடன் அங்கிருந்து விரட்டப்பட்டது. இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் பெண்கள் விடுதியின் அறையை தாழிட்டு பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுத்தது. 

    ஏற்கனவே, கடந்த வருடம் டெல்லி மாநில தலைமை செயலகத்தில் 2 அடி நீளம் உடைய  இதே வகை ராட்சத பல்லி ஒன்று நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
    #Giganticlizard
    Next Story
    ×