என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகா டாட்டா காட்டும் நேரம் வந்து விட்டது - பிரதமர் மோடி
Byமாலை மலர்9 May 2018 7:37 AM GMT (Updated: 9 May 2018 7:37 AM GMT)
கர்நாடகாவை விட்டு வெளியேறும் நேரம் காங்கிரஸ் கட்சிக்கு வந்துவிட்டது என பிரதமர் மோடி இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது கூறியுள்ளார். #KarnatakaElections #PMModi
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக பிரதமர் மோடி இன்று கோலார் நகரில் உள்ள பங்கார்பேட் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியை 6 நோய்கள் தாக்கியுள்ளது. அந்த நோய் அனைத்து இடத்திற்கும் பரவ தொடங்கியுள்ளது. அவை காங்கிரஸ் கலாச்சாரம், கம்யூனிசம், ஜாதி, குற்றம், ஊழல், ஒப்பந்த அமைப்பு ஆகியவை. இந்த 6 நோய்களும் கர்நாடகாவின் எதிர்காலத்தை தகர்த்த வல்லது.
நேற்று ஒருவர் நான் பிரதமராக போகிறேன் என கூறியுள்ளார். வரிசையில் இருப்பவர்களை தள்ளிவிட்டு, 40 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களையெல்லாம் தாண்டி நான் பிரதமராவேன் என கூறுவது அகந்தைக்கு ஆதாரமாகும். காங்கிரஸ் ஒப்பந்தங்கள் செய்வதில் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளது. இதை நான் கூறவில்லை. காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தான் இதை கூறினார். மேலும், கர்நாடகாவை விட்டு வெளியேறும் நேரம் காங்கிரசிற்கு வந்துவிட்டது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவரை சோனிய காந்தி பின் இருந்து இயக்கினார். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து கட்டுப்பாடும் மக்கள் கையில் உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #KarnatakaElections #PMModi
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகின்ற 12-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக பிரதமர் மோடி இன்று கோலார் நகரில் உள்ள பங்கார்பேட் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியை 6 நோய்கள் தாக்கியுள்ளது. அந்த நோய் அனைத்து இடத்திற்கும் பரவ தொடங்கியுள்ளது. அவை காங்கிரஸ் கலாச்சாரம், கம்யூனிசம், ஜாதி, குற்றம், ஊழல், ஒப்பந்த அமைப்பு ஆகியவை. இந்த 6 நோய்களும் கர்நாடகாவின் எதிர்காலத்தை தகர்த்த வல்லது.
நேற்று ஒருவர் நான் பிரதமராக போகிறேன் என கூறியுள்ளார். வரிசையில் இருப்பவர்களை தள்ளிவிட்டு, 40 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களையெல்லாம் தாண்டி நான் பிரதமராவேன் என கூறுவது அகந்தைக்கு ஆதாரமாகும். காங்கிரஸ் ஒப்பந்தங்கள் செய்வதில் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளது. இதை நான் கூறவில்லை. காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தான் இதை கூறினார். மேலும், கர்நாடகாவை விட்டு வெளியேறும் நேரம் காங்கிரசிற்கு வந்துவிட்டது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவரை சோனிய காந்தி பின் இருந்து இயக்கினார். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து கட்டுப்பாடும் மக்கள் கையில் உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். #KarnatakaElections #PMModi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X