என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை - சிம்லா நகரம் முடங்கியது
Byமாலை மலர்8 May 2018 9:37 AM GMT (Updated: 8 May 2018 9:37 AM GMT)
வட இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. #Shimlahailstorm
சிம்லா:
உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் வீசிய மணல் புயலுக்கு 124 பேர் பலியாகினர். இதை தொடர்ந்து அடுத்த இரண்டு தினங்களுக்கு 13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
அரியானா, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து நேற்று பின்னிரவு முதல் இன்று காலைவரை டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மணல் புயல் தாக்கியது.
இதேபோல், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மழையும் கொட்டித் தீர்த்தது. அதிகாலையில் இருந்து கடுமையான பனிப்பொழிவும் ஏற்பட்டது. தலைநகர் சிம்லாவின் பல பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் ஆலங்கட்டி மழையால் விழுந்த பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது. #Shimlahailstorm
உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் வீசிய மணல் புயலுக்கு 124 பேர் பலியாகினர். இதை தொடர்ந்து அடுத்த இரண்டு தினங்களுக்கு 13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
அரியானா, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், ஒடிசா, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து நேற்று பின்னிரவு முதல் இன்று காலைவரை டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மணல் புயல் தாக்கியது.
இதேபோல், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மழையும் கொட்டித் தீர்த்தது. அதிகாலையில் இருந்து கடுமையான பனிப்பொழிவும் ஏற்பட்டது. தலைநகர் சிம்லாவின் பல பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் ஆலங்கட்டி மழையால் விழுந்த பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது. #Shimlahailstorm
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X