என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் தொடரும் கொடூரம் - கத்தி முனையில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
Byமாலை மலர்24 April 2018 10:49 AM GMT (Updated: 24 April 2018 10:49 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கத்தியை காட்டி மிரட்டி 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. சிறுமிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இக்குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், பால்ரம்பூர் மாவட்டத்தில் வயலில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 8-வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 28 வயது வாலிபர் வழிமறித்து தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். அதனை தடுத்த சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த கிராமத்தினர் வாலிபரை விரட்டிப்பிடித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. சிறுமிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இக்குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், பால்ரம்பூர் மாவட்டத்தில் வயலில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 8-வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 28 வயது வாலிபர் வழிமறித்து தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். அதனை தடுத்த சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த கிராமத்தினர் வாலிபரை விரட்டிப்பிடித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X