search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்கத்தில் காளான் சாப்பிட்டு 4 பேர் உயிரிழப்பு
    X

    மேற்கு வங்கத்தில் காளான் சாப்பிட்டு 4 பேர் உயிரிழப்பு

    மேற்கு வங்க மாநிலத்தின் கலிம்போங் பகுதியில் காட்டு காளான் சாப்பிட்ட இரண்டு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கலிம்போங் பகுதியை சேர்ந்தவர் அண்டிம் ராய். இவர் கடந்த வியாழன்கிழமை காட்டு பகுதியில் இருந்து சில காளான் வகை செடிகளை பறித்து வந்துள்ளார். அதை அவரது குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீட்டினர் உடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டுள்ளார். 

    சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஏழு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் சம்பவம் நடந்த அன்று இரவே மரணமடைந்துள்ளார். 

    இந்நிலையில், இந்த சம்பவத்தில் இரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காளான் சாப்பிட்ட இரண்டு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×