என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமித் ஷாவை பற்றிய உண்மை மக்களுக்கு தெரியும் - பா.ஜ.க.வின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ராகுல்
Byமாலை மலர்20 April 2018 8:24 AM GMT (Updated: 20 April 2018 8:24 AM GMT)
பெரும்பாலான இந்தியர்கள், அமித்ஷாவை பற்றிய உண்மையை அறிந்து இருப்பார்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
பா.ஜனதா தலைவர் அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா திடீரென மரணமடைந்தார். இது தொடர்பாக சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், லோயா மரணத்தில் சிறப்பு விசாரணை தேவை இல்லை என நேற்று தீர்ப்பளித்தனர்.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டதன் பின்னணியில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இருந்ததாக கூறியுள்ள பா.ஜ.க., இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் கூறியிருந்தார்.
பா.ஜ.க.வின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். “இந்தியர்கள் மிகுந்த புத்திசாலிகள். பாரதிய ஜனதா கட்சியினர் உட்பட பெரும்பாலான இந்தியர்கள், அமித் ஷாவை பற்றிய உண்மையை அறிந்து இருப்பார்கள்” என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார். #tamilnews
பா.ஜனதா தலைவர் அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா திடீரென மரணமடைந்தார். இது தொடர்பாக சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், லோயா மரணத்தில் சிறப்பு விசாரணை தேவை இல்லை என நேற்று தீர்ப்பளித்தனர்.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டதன் பின்னணியில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இருந்ததாக கூறியுள்ள பா.ஜ.க., இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் கூறியிருந்தார்.
பா.ஜ.க.வின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். “இந்தியர்கள் மிகுந்த புத்திசாலிகள். பாரதிய ஜனதா கட்சியினர் உட்பட பெரும்பாலான இந்தியர்கள், அமித் ஷாவை பற்றிய உண்மையை அறிந்து இருப்பார்கள்” என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X