search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷாவை பற்றிய உண்மை மக்களுக்கு தெரியும் -  பா.ஜ.க.வின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ராகுல்
    X

    அமித் ஷாவை பற்றிய உண்மை மக்களுக்கு தெரியும் - பா.ஜ.க.வின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ராகுல்

    பெரும்பாலான இந்தியர்கள், அமித்ஷாவை பற்றிய உண்மையை அறிந்து இருப்பார்கள் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    பா.ஜனதா தலைவர் அமித் ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா திடீரென மரணமடைந்தார். இது தொடர்பாக சிறப்பு விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள், லோயா மரணத்தில் சிறப்பு விசாரணை தேவை இல்லை என நேற்று தீர்ப்பளித்தனர்.

    இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டதன் பின்னணியில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் இருந்ததாக கூறியுள்ள பா.ஜ.க., இது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் கூறியிருந்தார்.

    பா.ஜ.க.வின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். “இந்தியர்கள் மிகுந்த புத்திசாலிகள். பாரதிய ஜனதா கட்சியினர் உட்பட பெரும்பாலான இந்தியர்கள், அமித் ஷாவை பற்றிய உண்மையை அறிந்து இருப்பார்கள்” என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார். #tamilnews
    Next Story
    ×