என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூரு மதுபாரில் கைகலப்பில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போலீசில் சரண்
Byமாலை மலர்19 Feb 2018 12:22 PM GMT (Updated: 19 Feb 2018 12:22 PM GMT)
கர்நாடக எம்.எல்.ஏ. ஹாரிசின் மகனும், இளைஞர் காங்கிரசின் தலைவருமான முகமத் ஹாரிஸ் நளாபத் போலீசில் இன்று சரணடைந்தார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் பெங்களூவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹாரிசின் மகனும், பெங்களூரு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான முகமத் ஹாரிஸ் கடந்த சனிக்கிழமை மதுக்கடையில் வித்வாத் என்ற நபரை அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வித்வாத்தின் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமத் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய காரணத்தால் முகமத் ஹாரிஸ் 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதலுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முகமத்திற்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள கபன் பார்க் போலீஸ் நிலையத்தில் முகமத் ஹாரிஸ் இன்று சரணடைந்தார். #tamilnews
கர்நாடகா மாநிலம் பெங்களூவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹாரிசின் மகனும், பெங்களூரு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான முகமத் ஹாரிஸ் கடந்த சனிக்கிழமை மதுக்கடையில் வித்வாத் என்ற நபரை அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வித்வாத்தின் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமத் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய காரணத்தால் முகமத் ஹாரிஸ் 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதலுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முகமத்திற்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள கபன் பார்க் போலீஸ் நிலையத்தில் முகமத் ஹாரிஸ் இன்று சரணடைந்தார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X