search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா: வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது
    X

    கொல்கத்தா: வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவர் கைது

    கொல்கத்தாவில் வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Kolkata #dowryproblem #husbandsoldwifeskidney

    கொல்கத்தா:

    நம் நாடு எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், இன்றைய நவீன உலகத்திலும் பெண்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால் பல பெண்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு போகும் அவலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ரிதா சர்கார் (28) என்ற பெண்ணை அவரது கணவர், 2 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி வந்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரிதா சர்கார் வயிற்று வலி காரணமாக அவரது கணவருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். 

    ஆனால் மருத்துவர்களோ ரிதா சர்காரிற்கு வயிற்றில் குடல் இறங்கி விட்டதாக கூறி அவரது கிட்னியை எடுத்து விற்றுவிட்டனர். இதற்கு ரிதா சர்காரின் கணவர் உடந்தையாக இருந்திருக்கிறார். இதனை அறியாத ரிதா சர்கார் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நாளில் ரிதா சர்காருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது.



    இதனையடுத்து அவர் வேறோரு தனியார் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து பார்த்துள்ளார். அதில், அவருடைய வயிற்றில் ஒரு கிட்னி இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரிதா சர்கார் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தார். 
     
    அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக் இருந்த ரிதா சர்காரின் கணவனை கைது செய்து விசாரித்ததில், ரூ. இரண்டு லட்சம் வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்றதை ஒப்புக் கொண்டார். வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை கணவரே விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kolkata #dowryproblem #husbandsoldwifeskidney
    Next Story
    ×