என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஷத்தை குடித்து ஜீரணிக்கும் சக்தியை பரமசிவன் எனக்கு அருளினார்: பிரதமர் மோடி உருக்கம்
Byமாலை மலர்8 Oct 2017 12:37 PM GMT (Updated: 8 Oct 2017 12:37 PM GMT)
குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது என்மீது பலர் கக்கிய விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை கடவுள் பரமசிவம் எனக்கு அருளினார் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அகமதாபாத்:
பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜாம்நகர் வந்தார்.
இன்று தனது பிறந்த ஊரான வாத்நகருக்கு காரில் சென்றார். அவர் பிரதமரான பிறகு இங்கு செல்வது இதுவே முதல் முறையாகும். எனவே அங்கு வழிநெடுக கூடியிருந்த பொதுமக்கள் அவர் மீது மலர்களை தூவி வரவேற்றனர்.
சிறு வயதில் படித்த பள்ளிக்கு சென்ற மோடி, அங்கிருந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசி கொண்டார். வாத்நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியை அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, கடந்த 2001-ம் ஆண்டுவாக்கில் நான் இந்த மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்தபோது என்மீது பெரும் பழிகள் சுமத்தப்பட்டன. என்மீது பலர் விஷத்தை கக்கினார்கள். அப்போது, விஷத்தை குடித்து ஜீரணிக்கும் சக்தியை கடவுள் பரமசிவம் எனக்கு அருளினார்.
அந்த சக்திதான் எனது தாய்நாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் இத்தனை காலம் பாடுபடும் பலத்தை தந்தது என குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜாம்நகர் வந்தார்.
இன்று தனது பிறந்த ஊரான வாத்நகருக்கு காரில் சென்றார். அவர் பிரதமரான பிறகு இங்கு செல்வது இதுவே முதல் முறையாகும். எனவே அங்கு வழிநெடுக கூடியிருந்த பொதுமக்கள் அவர் மீது மலர்களை தூவி வரவேற்றனர்.
சிறு வயதில் படித்த பள்ளிக்கு சென்ற மோடி, அங்கிருந்த மண்ணை எடுத்து நெற்றியில் பூசி கொண்டார். வாத்நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரியை அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, கடந்த 2001-ம் ஆண்டுவாக்கில் நான் இந்த மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்தபோது என்மீது பெரும் பழிகள் சுமத்தப்பட்டன. என்மீது பலர் விஷத்தை கக்கினார்கள். அப்போது, விஷத்தை குடித்து ஜீரணிக்கும் சக்தியை கடவுள் பரமசிவம் எனக்கு அருளினார்.
அந்த சக்திதான் எனது தாய்நாட்டுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் இத்தனை காலம் பாடுபடும் பலத்தை தந்தது என குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X