என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்பாக்கி முனையில் இரு சகோதரிகள் கற்பழிப்பு - ஜார்கண்ட்டில் கொடூரம்
Byமாலை மலர்4 Oct 2017 3:21 PM GMT (Updated: 4 Oct 2017 3:21 PM GMT)
ஜார்கண்ட் மாநிலத்தில் துப்பாக்கி முனையில் இரு சகோதரிகளை மூன்று பேர் கூட்டாக சேர்ந்து கற்பழிப்பு செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தின் பலமு மாவட்டத்திற்குட்பட்ட கையாகி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் நேற்றிரவு இயற்கை உபாதைகள் காரணமாக இருள் நிறைந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த மூன்று பேர் துப்பாக்கி முனையில் இரு சகோதரிகளையும் கற்பழித்துள்ளனர். அதோடு கைபேசியில் படமெடுத்து மிரட்டியுள்ளனர்.
அவர்களில் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த ராஷ்திரிய ஜனதா தள கட்சி பிரமுகரின் மகன் சோட்டு யாதவ் என அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டது. சோட்டு யாதவ் ஏற்கனவே குற்றப்பிண்ணனி உள்ளவன் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அவனும் அவனது இரு நண்பர்களும் சேர்ந்து நடத்தியுள்ளனர் எனவும் அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கற்பழிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள சர்தார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு பெண்ணிற்கு அதிக அளிவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் அவரது நிலமை மோசமாக உள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X