என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நீதிமன்றம் சொன்னால் மட்டுமே இழப்பீடு: அரியானா முதல் மந்திரி பேட்டி
Byமாலை மலர்22 Sep 2017 8:35 AM GMT (Updated: 22 Sep 2017 8:35 AM GMT)
தேரா சச்சா சவுதா தலைவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக நடைபெற்ற கலவரத்தின்போது, போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நீதிமன்றம் சொன்னால்தான் இழப்பீடு வழங்கப்படும் என அரியானா முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
சண்டிகர்:
பாலியல் புகார் குறித்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது. இதைதொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரத்தில் ஈடுபட்டனர். பொது சொத்துக்களுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தினர்.
இதையடுத்து. குர்மீத்தின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரியானா போலீசார் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கலவரம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. போலீசார் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் முடிவு செய்தால், அதை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். நீதிமன்றம் சொன்னால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பாலியல் புகார் குறித்த வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அரியானா நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது. இதைதொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கலவரத்தில் ஈடுபட்டனர். பொது சொத்துக்களுக்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தினர்.
இதையடுத்து. குர்மீத்தின் ஆதரவாளர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரியானா போலீசார் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கலவரம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. போலீசார் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் முடிவு செய்தால், அதை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். நீதிமன்றம் சொன்னால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X