என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லையில் பலியான வீரரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும்: உ.பி. மந்திரி அறிவிப்பு
Byமாலை மலர்16 Sep 2017 6:10 AM GMT (Updated: 16 Sep 2017 6:10 AM GMT)
எல்லையில் பலியான வீரரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என உ.பி. மந்திரி ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
லக்னோ:
காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் நேற்றும் தாக்குதல் நடத்தியது. இதில் உ.பி.யின் பாலியா மாவட்டத்தின் வித்யாபவன் நாராய்பூர் கிராமத்தை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் பிஜேந்தர் பகதூர் உயிரிழந்தார்.
இந்நிலையில், பகதூரின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் இன்று நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேச மந்திரி ஸ்ரீகாந்த் சர்மா உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது சர்மா கூறுகையில், எல்லையில் பலியான வீரரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும். அவரது துணிவை போற்றும் வகையில் நினைவு தூண் மற்றும் நினைவிடம் அமைக்கப்படும். விளையாட்டு மைதானத்துக்கு அவரது
பெயர் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநில எல்லைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்து இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் நேற்றும் தாக்குதல் நடத்தியது. இதில் உ.பி.யின் பாலியா மாவட்டத்தின் வித்யாபவன் நாராய்பூர் கிராமத்தை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் பிஜேந்தர் பகதூர் உயிரிழந்தார்.
இந்நிலையில், பகதூரின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் இன்று நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேச மந்திரி ஸ்ரீகாந்த் சர்மா உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது சர்மா கூறுகையில், எல்லையில் பலியான வீரரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும். அவரது துணிவை போற்றும் வகையில் நினைவு தூண் மற்றும் நினைவிடம் அமைக்கப்படும். விளையாட்டு மைதானத்துக்கு அவரது
பெயர் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X