என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரியாக செயல்படாத 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 381 பேர் மீது நடவடிக்கை - மத்திய பணியாளர் நலத்துறை தகவல்
Byமாலை மலர்26 July 2017 12:47 AM GMT (Updated: 26 July 2017 12:47 AM GMT)
சரியாக செயல்படாத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 381 உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், ‘மனிதவள மேம்பாட்டுத்துறையின் 3 ஆண்டு நடவடிக்கைகள்; புதிய இந்தியாவுக்கான அடித்தளம்’ என்ற பெயரில் ஒரு கையேட்டை தயாரித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த கையேட்டில் கூறியிருப்பதாவது:-
சரியாக செயல்படாத மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் பணியாற்றி வரும் 2,953 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 11,828 ஏ பிரிவு அதிகாரிகள், 19,714 பி பிரிவு அதிகாரிகளின் பணி பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் சரியாக செயல்படாத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 381 உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக ஒரு ஐ.ஏ.எஸ். மற்றும் 2 ஐ.பி.எஸ். உள்பட 25 ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் 99 பி பிரிவு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. 10 ஐ.ஏ.எஸ். உள்பட 21 அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். 5 ஐ.ஏ.எஸ். உள்பட 37 ஏ பிரிவு அதிகாரிகள் பணிநீக்கம் அல்லது கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதுடன் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் 8 ஐ.ஏ.எஸ். உள்பட 199 ஏ பிரிவு அதிகாரிகளின் ஊதியத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், ‘மனிதவள மேம்பாட்டுத்துறையின் 3 ஆண்டு நடவடிக்கைகள்; புதிய இந்தியாவுக்கான அடித்தளம்’ என்ற பெயரில் ஒரு கையேட்டை தயாரித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த கையேட்டில் கூறியிருப்பதாவது:-
சரியாக செயல்படாத மற்றும் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் பணியாற்றி வரும் 2,953 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 11,828 ஏ பிரிவு அதிகாரிகள், 19,714 பி பிரிவு அதிகாரிகளின் பணி பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் சரியாக செயல்படாத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 24 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 381 உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக ஒரு ஐ.ஏ.எஸ். மற்றும் 2 ஐ.பி.எஸ். உள்பட 25 ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் 99 பி பிரிவு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. 10 ஐ.ஏ.எஸ். உள்பட 21 அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். 5 ஐ.ஏ.எஸ். உள்பட 37 ஏ பிரிவு அதிகாரிகள் பணிநீக்கம் அல்லது கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதுடன் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் 8 ஐ.ஏ.எஸ். உள்பட 199 ஏ பிரிவு அதிகாரிகளின் ஊதியத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X