search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "punished"

    ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பள்ளி மாணவன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நீதிபதி நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 17 வயது நிரம்பிய பள்ளி மாணவன்(பிளஸ்-1 படித்து வருகிறான்) கடந்த ஜனவரி மாதம் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று வயதான பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினான். இதில் அந்த பெண்ணுக்கு கையில் காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் அந்த பள்ளி மாணவன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சிறார் கோர்ட்டில் கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளி மாணவன் என்பதால், அவனுக்கு நூதனமான முறையில் தண்டனை வழங்கி இருக்கிறார்.

    அதாவது 2 நாட்கள்(ஒவ்வொரு நாளும் 8 மணி நேரம் வீதம் 16 மணி நேரம்) போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி, சாலை விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்படி, பள்ளி மாணவன் சென்னை கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் சிக்னல் அருகே நேற்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டான். அவனுக்கு கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ, தலைமை காவலர் கோபி ஆகியோர் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், ஒழுங்குபடுத்துவது குறித்தும் எடுத்துக்கூறினர்.

    ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்களிடமும், ‘சீட்’ பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடமும் சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினான்.

    ‘ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது என்றும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக நான் போக்குவரத்தை ஒழுங்கு செய்கிறேன்’ என்று சாலை விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினான். இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) தனது பணியை செய்ய இருக்கிறான்.

    இதுகுறித்து அந்த பள்ளிமாணவனிடம் கேட்டபோது, ‘வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிய குற்றத்துக்காக எனக்கு இந்த தண்டனையை நீதிபதி வழங்கினார். அவரிடம் 18 வயது நிரம்பிய பின், ஓட்டுனர் உரிமம் எடுத்து அதன்பிறகு தான் வாகனம் ஓட்டுவேன் என்று கூறி இருக்கிறேன். என்னை போல் இருக்கும் சிறுவர்கள் யாரும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்காதீர்கள். நான் படித்து முடித்து பெரியவன் ஆகி போலீஸ் ஆவதே என் விருப்பம். இப்போது நான் செய்த போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியை அப்போது போலீஸ் சீருடையில் வந்து செய்வேன்’ என்றான். 
    வருமான வரித்துறை சோதனையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சேலத்தில் இல. கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #ilaganesan #incometaxraid

    சேலம்:

    சேலம் மரவனேரியில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இல.கணேசன் எம்.பி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆடிட்டர் ரமேஷ் அவருக்காக வாழாமல் ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தார். இவர் பண்பு, பணிவு குணத்தோடு வாழ்ந்தவர். இறந்த போது ஆஸ்பத்திரியில் இருந்து அவர் உடலை எடுத்து செல்லும் போது பொதுமக்கள் கதறி அழுதனர், அதை நான் நேரில் பார்த்தேன். அவர் உண்மையான தொண்டனாக இருந்தார். அவருடன் இருந்த நிர்வாகிகளுக்கு அவர் விட்டுச்சென்ற பணிகளை முழுமையாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோளாக வைக்கிறேன். 5 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் வேதனை அளிக்கிறது என்னவென்றால் கொலையாளிகளை தேடும் முயற்சி, தண்டனை வழங்கும் முயற்சியும் முழுமை பெறவில்லை.

    இது போன்ற நிகழ்வுகளில் மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து, விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். வருமான வரி ரெய்டு என்பது பாராட்டுக்குரியது. யார் தவறு செய்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும். ரெய்டு மூலம் வருமான வரித்துறையினர் தவறு உண்மை என்றால் அவர்கள் மீது நீதி மன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவார்கள்.

    சிறுமி மீது நடந்த பாலியல் சம்பவம் வேதனை அளிக்கிறது. பாலியல் குற்றங்கள் குறைய கடுமையான சட்டம் ஏற்ற வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் கொண்டு வர பரிசீலித்து வருகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கோபிநாத், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன், முருகேசன், அண்ணாதுரை, எஸ்.சி. எஸ்.டி பிரிவு செல்வம், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #ilaganesan #incometaxraid

    குமரி மாவட்டத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த துணைநின்ற மாவட்ட கலெக்டர், மற்றும் துப்பாக்கியால் சுட்ட காவல்துறையினருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.#SterliteProtest
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது.

    குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில், கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில், குமரி மாவட்ட திருவருட்பேரவை பொதுச்செயலாளர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் உள்பட பலர் தூத்துக்குடி பிரச்சினை தொடர்பாக, குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுப்புகையினால் சுற்றுச்சூழல் மாசுபட்டு புற்றுநோய் போன்ற பல்வேறு உயிர்கொல்லும் நோய்களினால் பாதிக்கப்பட்டு உயிர்களை பலி கொடுத்து வரும் மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் 100-வது நாளில் நீதி கேட்டு பேரணியாகச் சென்ற வேளையில் காவல்துறை அத்துமீறி, வன்முறைத் தாக்குதல் நடத்தி எந்தவித முன் எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். சுமார் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காவல்துறையின் இந்த வன்முறைத் தாக்குதல் மனிதநேயமுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

    கொல்லப்பட்டவர்கள், காயம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமூக நீதி அடிப்படையில் தகுந்த இழப்பீட்டு தொகை மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கிட வேண்டும். வேறு பல மாநிலங்களில் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் கால் பதித்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படவேண்டும்.

    துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் முரட்டுத்தனமாக துப்பாக்கி சூடு நடத்த துணைநின்ற மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் துப்பாக்கியால் சுட்ட காவல்துறை வீரர்கள் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். காணாமல் போன மக்களைக் கண்டறிந்து அவர்களை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ், குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை ராஜ், குமரி மாவட்ட திருவருட்பேரவை ஒருங்கிணைப்பாளர் மரியவின்சென்ட், மரியவிக்டர், பங்கிராஸ், ஸ்டீபன், அகமது உசேன் ஆகியோர் உடன் சென்றனர். #SterliteProtest
    ×