என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவை கைது செய்தது அமலாக்கத் துறை
Byமாலை மலர்26 July 2017 12:27 AM GMT (Updated: 26 July 2017 12:28 AM GMT)
தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
ஸ்ரீநகர்:
ஹவாலா மோசடி மூலம் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா மீது 10 ஆண்டுக்கு முன் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த புகாரில் ஷபீர் ஷாவுக்கு அமலாக்க துறை தொடர்ச்சியாக பல்வேறு சம்மன் அனுப்பி வந்தது. இருப்பினும் ஷா அமலாக்கத் துறை முன்பு நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, டெல்லி நீதிமன்றம் ஷாவுக்கு எதிராக கடந்த மாதம் பினையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது
இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஷபீர் ஷாவை அமலாக்கத் துறை நேற்று கைது செய்துள்ளது.
ஸ்ரீநகரில் வைத்து ஷா கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவார் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹவாலா மோசடி மூலம் தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா மீது 10 ஆண்டுக்கு முன் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த புகாரில் ஷபீர் ஷாவுக்கு அமலாக்க துறை தொடர்ச்சியாக பல்வேறு சம்மன் அனுப்பி வந்தது. இருப்பினும் ஷா அமலாக்கத் துறை முன்பு நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, டெல்லி நீதிமன்றம் ஷாவுக்கு எதிராக கடந்த மாதம் பினையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது
இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஷபீர் ஷாவை அமலாக்கத் துறை நேற்று கைது செய்துள்ளது.
ஸ்ரீநகரில் வைத்து ஷா கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவார் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X