என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டவிரோத பணபரிமாற்றம்: பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 7 ஆண்டுகள் ஜெயில்
Byமாலை மலர்26 July 2017 12:17 AM GMT (Updated: 26 July 2017 12:17 AM GMT)
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கிய பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி முகமது கோயாவிற்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
புதுடெல்லி:
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டம் 2002-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இது 2005-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க முடியும்.
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி முகமது கோயா சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கினார். இந்த வழக்கு கர்நாடக கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இது குறித்து அமலாக்க பிரிவு அதிகாரிகள் மேலும் கூறுகையில், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஏற்கனவே ஜார்கண்ட் முன்னாள் மந்திரி ஹரி நாராயணன் ராய்க்கு, ராஞ்சி கோர்ட்டு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து அலாவுதீன் என்பவருக்கு கொல்கத்தா கோர்ட்டு தண்டனை அளித்தது. அதன் பிறகு தற்போது 3-வது நபராக தற்போது முகமது கோயாவுக்கு இந்த வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது என்றனர்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டம் 2002-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இது 2005-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க முடியும்.
இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி முகமது கோயா சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கினார். இந்த வழக்கு கர்நாடக கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதாக அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இது குறித்து அமலாக்க பிரிவு அதிகாரிகள் மேலும் கூறுகையில், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஏற்கனவே ஜார்கண்ட் முன்னாள் மந்திரி ஹரி நாராயணன் ராய்க்கு, ராஞ்சி கோர்ட்டு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து அலாவுதீன் என்பவருக்கு கொல்கத்தா கோர்ட்டு தண்டனை அளித்தது. அதன் பிறகு தற்போது 3-வது நபராக தற்போது முகமது கோயாவுக்கு இந்த வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டு இருக்கிறது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X