search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை - தயாநிதி மாறன் தாக்கு
    X

    மோடி ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை - தயாநிதி மாறன் தாக்கு

    கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர வில்லை என்று திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். #DMK #LokSabhaElections2019

    சென்னை:

    மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் ஆயிரம்விளக்கு தொகுதியில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே பிரசாரத்தை தொடங்கி கோபாலபுரம் கலைஞர் இல்லம் வரை வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

    ஆயிரம்விளக்கு தொகுதியிலும் தி.மு.க. எம்.எல்ஏ.தான் உள்ளார். என்னையும் எம்.பி.யாக தேர்வு செய்தால் இந்த தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் மேலும் அதிகம் கிடைக்கும். இது தொகுதி மக்களுக்கு கிடைக்கும் இரட்டிப்பு யோகமாகும்.

    கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வர வில்லை. நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒற்றுமையாக உள்ள மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பா.ஜனதா தொடர்ந்து செயல்படுகிறது.

    எனவே மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்துக்கு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின்போது மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ., கு.க. செல்வம் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை, வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் திருவல்லிக்கேணி வி.பி.மணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நடந்து சென்று வாக்கு கேட்டனர். பிரசாரத்தின் போது தயாநிதி மாறனுக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர். #LokSabhaElections2019 #DMK

    Next Story
    ×