search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் யுத்தத்தில் மோடி எங்கள் கிருஷ்ணர் - ராஜேந்திர பாலாஜி
    X

    தேர்தல் யுத்தத்தில் மோடி எங்கள் கிருஷ்ணர் - ராஜேந்திர பாலாஜி

    தேர்தல் யுத்தத்தில் பிரதமர் மோடி எங்கள் கிருஷ்ணர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். #MinisterRajendraBalaji #ADMK

    சிவகாசி:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் பிளவை ஏற்படுத்தலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களது எண்ணம் நிறைவேறாது. தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்டது எங்கள் கூட்டணி. நாங்கள் பள்ளி வாசலில் தொழுகை நடத்துவோம். தேவாலயத்தில் பிரார்த்தனை செய்வோம். அனைத்து கோவில்களில் சாமியும் கும்பிடுவோம்.

    மகாபாரதத்தில் கிருஷ்ணர் தலைமையில் அவரது ஆலோசனைப்படி பஞ்சபாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அதேபோல நாங்களும் வெற்றி பெறுவோம். தேர்தல் யுத்தத்தில் மோடிதான் எங்களின் கிருஷ்ணர். அர்ஜுணனாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.


    8 வழிச்சாலை திட்டத்தை பொதுமக்கள் எதிர்த்தால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த திட்டத்தை கைவிடலாம். 8 வழிச்சாலை திட்டம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்வார்.

    மோடி வாயால் வடை சுடுவார் என மு.க. ஸ்டாலின் எழுதி வைத்து பேசுகிறார். மோடி வடை சுட்டால் அனைவருக்கும் பயன்படும். தி.மு.க.வினர் சூடான எண்ணையை மக்கள் மீது ஊற்றி விடுவார்கள். சாப்பிட்ட வடை, புரோட்டாவுக்கு காசு கேட்டால் முகத்தில் குத்துகிறார்கள். பெண்களிடமே மாமூல் கேட்கும் கட்சி தி.மு.க.

    கிருஷ்ணரை கேவலப்படுத்தும் வீரமணியை வைத்துக் கொண்டு திருநீறு பூசுவது போல் நாடகம் போட்டு ஓட்டு வாங்க அலைகின்றனர். தி.மு.க.வினர் வீரமணி பேச்சை திசை திருப்பு வதற்காக நாடகம் நடத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterRajendraBalaji #ADMK

    Next Story
    ×