search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடபழனியில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது
    X

    வடபழனியில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 2 பேர் கைது

    வடபழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    வடபழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் இரவு நேரங்களில் திருட்டு போவதாக வடபழனி குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலுசாமி மற்றும் போலீசார் திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலு மற்றும் ஜனார்த்தனன் என்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு நேரத்தில் காற்று வாங்க கதவை திறந்து வைத்துவிட்டு தூங்குபவர்களின் வீடுகளை நோட்டமிட்டு செல்போன் திருட்டில் ஈடுபட்டு கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.
    Next Story
    ×