என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே விஷம் குடித்த 2 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்9 Jun 2019 3:46 PM GMT (Updated: 9 Jun 2019 3:46 PM GMT)
நெல்லை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் விவசாயி மது குடித்து விட்டு வந்ததை உறவினர்கள் கண்டித்ததால் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த திருமலா புரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லையாம். இதனால் சம்பவத்தன்று அவர் விஷம் குடித்துவிட்டு திருமலாபுரம் அருகே உள்ள வயல்காட்டில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளை சீவலப்பேரி அருகே உள்ள மேலபாலா மடை கிராமத்தை சேர்ந்தவர் பூதப்பாண்டி (58), விவசாயி. இவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் அவரை சத்தம் போட்டனர். இதில் மனமுடைந்த பூதப்பாண்டி சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X