என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவண்ணாரப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் திருடிய 2 கார் டிரைவர்கள் கைது
Byமாலை மலர்4 Jun 2019 9:32 AM GMT (Updated: 4 Jun 2019 9:32 AM GMT)
புதுவண்ணாரப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட 2 கார் டிரைவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
ராயபுரம்:
புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் குடியிருப்பவர் சிராத்பஞ்சால். தொழில்அதிபர்.
ஸ்டீல் கம்பெனி நடத்தி வரும் இவருடைய வீட்டில் கார்த்திக் (32), அந்தோணி (34) ஆகியோர் டிரைவர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். கோடை விடுமுறையை கழிப்பதற்காக சிராத்பஞ்சால் வெளியூர் சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் அவருடைய உறவினரான ராஜேஷ் குப்தா என்பவர் சிராத்பஞ்சாலை தேடி வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர் வெளியூர் சென்று இருப்பதாக கூறினார்கள்.
ஆனால் அங்கு சென்ற போது வீடு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் குப்தா வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவை திறந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் பீரோவின் பின்னால் பதுங்கினார்கள்.
அருகில் சென்றதும் அவரை தள்ளி விட்டு வெளியே ஓடினார்கள். அப்போது, 2 பேரும் அந்த வீட்டில் வேலை செய்யும் டிரைவர்கள் என்பதும் ராஜேஷ் குப்தா பார்த்து விட்டதால் தப்பி ஓடியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர்கள் கார்த்திக், அந்தோணி ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் தொழில் அதிபர் இல்லாதபோது அவருடைய வீட்டை கள்ளச்சாவி போட்டு திறந்ததும், பணம், நகையை கொள்ளையடிப்பதற்காக பீரோவை திறந்ததும் தெரிய வந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் குடியிருப்பவர் சிராத்பஞ்சால். தொழில்அதிபர்.
ஸ்டீல் கம்பெனி நடத்தி வரும் இவருடைய வீட்டில் கார்த்திக் (32), அந்தோணி (34) ஆகியோர் டிரைவர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். கோடை விடுமுறையை கழிப்பதற்காக சிராத்பஞ்சால் வெளியூர் சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் அவருடைய உறவினரான ராஜேஷ் குப்தா என்பவர் சிராத்பஞ்சாலை தேடி வந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர் வெளியூர் சென்று இருப்பதாக கூறினார்கள்.
ஆனால் அங்கு சென்ற போது வீடு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் குப்தா வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவை திறந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் பீரோவின் பின்னால் பதுங்கினார்கள்.
அருகில் சென்றதும் அவரை தள்ளி விட்டு வெளியே ஓடினார்கள். அப்போது, 2 பேரும் அந்த வீட்டில் வேலை செய்யும் டிரைவர்கள் என்பதும் ராஜேஷ் குப்தா பார்த்து விட்டதால் தப்பி ஓடியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர்கள் கார்த்திக், அந்தோணி ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் தொழில் அதிபர் இல்லாதபோது அவருடைய வீட்டை கள்ளச்சாவி போட்டு திறந்ததும், பணம், நகையை கொள்ளையடிப்பதற்காக பீரோவை திறந்ததும் தெரிய வந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X