search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே வி‌ஷம் குடித்து நர்ஸ் தற்கொலை
    X

    பாவூர்சத்திரம் அருகே வி‌ஷம் குடித்து நர்ஸ் தற்கொலை

    பாவூர்சத்திரம் அருகே நர்ஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள வேட்டைக்காரன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பூதப்பாண்டி. இவரது மகள் சங்கரகோமதி (வயது21). இவர் தென்காசியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ‘நர்ஸ்’ ஆக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர கோமதியின் தங்கை ஒரு வாலிபரை காதலித்து, காதல் திருமணம் செய்தார். அக்காள் இருக்கும் போது தங்கை காதல் திருமணம் செய்யலாமா என்று அவரது குடும்பத்தினர் காதல் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் காதல் திருமணம் செய்த இளைய மகளை வீட்டுக்கு வரக்கூடாது என்று பெற்றோர் தடை விதித்தனர். அந்த தங்கை மீது சங்கர கோமதி அதிக பாசம் வைத்து இருந்தாராம். இதனால் அவர் உடனடியாக தங்கையை வீட்டுக்கு அழைக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கூறி வந்தார்.

    இதனால் அவரது பெற்றோர் சங்கர கோமதிக்கு விரைவில் வரன் பார்த்து திருமணம் செய்து முடித்த பிறகு தங்கையை வீட்டுக்கு அழைக்கலாம் என்று கூறினர். இதைத்தொடர்ந்து சங்கர கோமதிக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் உடனடியாக எந்த மாப்பிள்ளையும் அமையவில்லை. சில மாதங்கள் கடந்ததால் மனம் உடைந்த சங்கர கோமதி கடந்த 16-ந்தேதி வி‌ஷம் குடித்தார்.

    அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு சங்கர கோமதி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×