search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை-பணம் திருட்டு
    X

    கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை-பணம் திருட்டு

    கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் குமரன் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவரது கணவர் தினகரன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி இரவு மகேஸ்வரி தனது வீட்டை பூட்டிக்கொண்டு, தனது தந்தை கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினரோடு பெங்களூரில் வசிக்கும் தனது தங்கை வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.

    மகேஸ்வரியின் வீடு திறந்து கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டுகாரர்கள் மகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது வீட்டின் முன்புற கதவு மற்றும் பின்புற கதவுகள் திறக்கப்பட்டு டிரங்க் பெட்டிகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மகேஸ்வரி என்னென்ன பொருட்கள் திருடுபோனது குறித்து புகார் செய்தபின்னரே விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் திருட்டு 7 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் போயிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×