search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry money theft"

    • டி.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி துரைராஜ் என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று இருந்தார்.
    • உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

    மொரப்பூர்:

    கோவையில் உள்ள பிரபல நகை கடையில் சிறிய துவாரத்தின் வழியாக கடந்த 28-ந்தேதி நுழைந்த வாலிபர் 4½ கிலோ தங்க மற்றும் வைர நகைகளை திருடிச் சென்றார்.

    இதுகுறித்து கோவை தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள தேவரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (வயது 28) என்பது தெரிய வந்தது. ஆனைமலையில் வீட்டில் பதுங்கி இருந்த விஜய்யை பிடிக்க தனிப்படை போலீசார் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேவரெட்டியூரில் உள்ள விஜயின் தந்தை முனிரத்தினம், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது தங்க மோதிரம், தங்க பிரேஸ்லெட் உள்ளிட்ட தங்க நகைகளும், 2 செல்போன்களும் வீட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முனிரத்தினம் அவற்றை கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து முனிரத்தினத்திடம் விசாரித்து அந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் டி.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி துரைராஜ்(45) என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று இருந்தார். நேற்று அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த மொரப்பூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    கோவை நகை கடையில் திருடிய விஜய், துரைராஜ் வீட்டில் திருட்டில் ஈடுபட்டானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நகை கடையில் திருடிய விஜய் அந்த மலைப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை தனிப்படை போலீசார் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • முன் கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றதாக கூறப்படுகிறது.
    • கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பி பாளையம்பகுதியைச் சேர்ந்த தவசியப்பன் (45). இவர் சின்னத்தம்பி பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராவார். தற்போது அவரது மனைவி சுமதி தவசியப்பன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டின் முன் கதவை பூட்டிவிட்டு அருகில் உள்ள அவரது பழைய வீட்டில் வெயில் காலம் என்பதால் அங்கு காற்று நன்றாக வரும் என்று அங்கே படுத்து தூங்கினர். இந்த நிலையில் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு 2 மணி அளவில்வீட்டின் மதில் சுவர் மேல் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்று உள்ளே சென்று முன் கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வருவதும் அதில் இருந்து இறங்கிய ஒருவர் பெண் பஞ்சாயத்து தலைவர் சுமதி தவசியப்பன் வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது.

    மேலும் திருட்டு நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி மோப்ப நாய் நின்றது. தொடர்ந்து போலீசார் நகை-பணம் திருடிசென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இந்த திருட்டு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 27 ஆயிரம் அபேஸ்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜாமணி (வயது 70) முன்னாள் சர்க்கரை ஆலை அலுவலர்.

    சில நாட்களுக்கு முன்பு வழுக்கி விழுந்தது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ஓசூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ராஜாமணி நேற்று வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவை உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 சவரன் தங்க நகை மற்றும் 27 ஆயிரம் மற்றும் அரை கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    இது குறித்து ராஜாமணி கொடுத்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டபகலில் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள மங்கலம் கிராமம், ரோட்டு தெருவில் வசித்து வருபவர் துரை சாமி மனைவி சம்பத்து அம்மாள். இவர் நேற்று மதியம் பக்கத்து தெருவில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 12 பவுன் நகை திருடப்பட்டு இருந்தது.

    உடனே இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். சப்- இன்ஸ்பெக்டர்ராஜா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    பட்டபகலில் நடந்த கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சாமநகரை சேர்ந்தவர் வேலு (வயது 47), டிராவல்ஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் அய்யப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு சபரிமலை சென்றுள்ளார். அவரது மனைவி பூங்கொடி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் திருப் பத்தூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள மாமியார் வீட் டிற்கு சென்று இரவு அங் கேயே தங்கியுள்ளார்.

    பின்னர், நேற்று காலை வீட் டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந் தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது மூன்று பீரோக்கள் உடைக்கப் பட்டு இருந்தது.

    பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருட் களை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பூங்கொடி திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர். மேலும் இதுகுறித்து வழக் குப்பதிந்து திருட்டு சம்பவத் தில்ஈடுபட்டமர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருட்டுப் போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவை அடுத்த கட்டுப்புடி சாரதி பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மனோ கரன் (வயது 65). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், மோகன் ராஜ் (32) என்ற மகனும் உள்ளனர். ஆதிலட்சுமி ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். மோகன் ராஜ் கரடிகுடிபகுதியில் செல் போன் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி காலை 8 மணிக்கு 3 பேரும் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்று உள்ளனர்.

    அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து மனோகரன் பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி அகரம்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது சந் தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த 2 பேரை பிடித்து வந்து இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் அவர்கள் வேலூர் சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (46), சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (51) என்பதும், மனோகரன் வீட்டில் திருடிய தும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    • அடுத்தடுத்த 2 கடைகளில் நகை-பணம் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    பழனி:

    பழனி மெயின்ரோடு பகுதியில் ஓட்டல் கடை நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. நேற்றிரவு இவர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று காலையில் வந்து பார்த்தபோது மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடையில் இருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

    இதேபோல அருகில் உள்ள நகை செய்யும் ரவிக்குமார் என்பவரது கடையிலும் இருந்த வெள்ளி பொருட்களை திருடிச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 2 கடைகளில் நடந்த இந்த திருட்டு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் குமரன் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவரது கணவர் தினகரன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி இரவு மகேஸ்வரி தனது வீட்டை பூட்டிக்கொண்டு, தனது தந்தை கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினரோடு பெங்களூரில் வசிக்கும் தனது தங்கை வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.

    மகேஸ்வரியின் வீடு திறந்து கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டுகாரர்கள் மகேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது வீட்டின் முன்புற கதவு மற்றும் பின்புற கதவுகள் திறக்கப்பட்டு டிரங்க் பெட்டிகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து மகேஸ்வரி என்னென்ன பொருட்கள் திருடுபோனது குறித்து புகார் செய்தபின்னரே விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் திருட்டு 7 பவுன் நகை மற்றும் ரூ.1.50 லட்சம் போயிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
    கோவை மாவட்டம் குனியமுத்தூரில் வியாபாரியின் வீட்டின் முன்கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    கோவை:

    கோவை குறிச்சி மாச்சம் பாளையம் ரோடு அம்மணியம்மாள் காலனியை சேர்ந்தவர் ஆபிரகாம் ஜெயக்குமார் (வயது 30).

    இவர் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நெல்லை சென்றார்.

    இன்று அதிகாலை வீடு திரும்பிய போது முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவஇடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    போத்தனூர் அருகே கேபிள் டிவி ஆபரேட்டர் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து 65 பவுன் நகை மற்றும் 1½ லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    கோவை:

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள சாரமேடு வள்ளலார் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 55). கேபிள் டி.வி. ஆபரேட்டர்.

    கடந்த 11-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றார். பின்னர் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. சாகுல்ஹமீது வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் 65 பவுன் தங்க நகைகள், ரூ. 1½ லட்சம் ரொக்க பணம் ஆகியவை திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். சாகுல் ஹமீது குடும்பத்துடன் வெளியூர் செல்வதை நோட்மிட்ட மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து சாகுல் ஹமீது போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து சாகுல் ஹமீதிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×