என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குனியமுத்தூரில் வியாபாரி வீட்டில் நகை-பணம் திருட்டு
Byமாலை மலர்18 Dec 2018 10:05 AM GMT (Updated: 18 Dec 2018 10:05 AM GMT)
கோவை மாவட்டம் குனியமுத்தூரில் வியாபாரியின் வீட்டின் முன்கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை:
கோவை குறிச்சி மாச்சம் பாளையம் ரோடு அம்மணியம்மாள் காலனியை சேர்ந்தவர் ஆபிரகாம் ஜெயக்குமார் (வயது 30).
இவர் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நெல்லை சென்றார்.
இன்று அதிகாலை வீடு திரும்பிய போது முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவஇடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கோவை குறிச்சி மாச்சம் பாளையம் ரோடு அம்மணியம்மாள் காலனியை சேர்ந்தவர் ஆபிரகாம் ஜெயக்குமார் (வயது 30).
இவர் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நெல்லை சென்றார்.
இன்று அதிகாலை வீடு திரும்பிய போது முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவஇடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X