search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அருகே அடுத்தடுத்த 2 கடைகளில் நகை-பணம் திருட்டு
    X

    கோப்பு படம்

    பழனி அருகே அடுத்தடுத்த 2 கடைகளில் நகை-பணம் திருட்டு

    • அடுத்தடுத்த 2 கடைகளில் நகை-பணம் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    பழனி:

    பழனி மெயின்ரோடு பகுதியில் ஓட்டல் கடை நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. நேற்றிரவு இவர் கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இன்று காலையில் வந்து பார்த்தபோது மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடையில் இருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

    இதேபோல அருகில் உள்ள நகை செய்யும் ரவிக்குமார் என்பவரது கடையிலும் இருந்த வெள்ளி பொருட்களை திருடிச்சென்றுள்ளனர்.

    இதுகுறித்து பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 2 கடைகளில் நடந்த இந்த திருட்டு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×