search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துடியலூர் அருகே கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    துடியலூர் அருகே கல்லூரி மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    கோவை துடியலூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் முகில் (வயது 19). இவர் கோவை துடியலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2 -ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று முகில் விடுதி அறையில் வி‌ஷத்தை குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த சக மாணவர்கள் இது குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக விரைந்து வந்து முகிலை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முகில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×