search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கூடல் அருகே அரசு பஸ் கண்டக்டர் மின்சாரம் தாக்கி பலி
    X

    முக்கூடல் அருகே அரசு பஸ் கண்டக்டர் மின்சாரம் தாக்கி பலி

    முக்கூடல் அருகே தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற அரசு பஸ் கண்டக்டர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆலங்குளம்:

    முக்கூடலை அடுத்த பாப்பாக்குடி அருகே உள்ள பனையங்குறிச்சியை சேர்ந்தவர் சந்திரன்(வயது40). இவர் சேரன்மகாதேவி அரசு போக்குவரத்து கழக டெப்போவில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர் தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். 

    கிணற்று பம்புசெட்டுக்குள் சென்ற அவர் மின்மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்திரன் பலத்த காயம் அடைந்தார். 

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வழியிலேயே சந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாப்பாக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×