என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலியார்பேட்டையில் ஆன்-லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது
Byமாலை மலர்5 April 2019 12:31 PM GMT (Updated: 5 April 2019 12:31 PM GMT)
முதலியார்பேட்டையில் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரில் ஒரு வீட்டில் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் ஜெயமூர்த்தி ராஜா நகர் செந்தமிழ் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் இருந்தவர் லேப்-டாப் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்றதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பிள்ளைத்தோட்டம் பள்ளத்தெருவை சேர்ந்த டோனி (வயது 40) என்பதும், பிரபல லாட்டரி சீட்டு வியாபாரியான இவர் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதற்காகவே ஜெயமூர்த்தி ராஜா நகரில் வீட்டை சொந்தமாக வாங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் இவரை மங்காத்தா டோனி என்றே பலரும் அழைத்து வந்துள்ளனர்.
இதையடுத்து டோனியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப்-டாப், செல்போன் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை பணம் ரூ.19,600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரில் ஒரு வீட்டில் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் ஜெயமூர்த்தி ராஜா நகர் செந்தமிழ் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டில் இருந்தவர் லேப்-டாப் மூலம் ஆன்-லைனில் லாட்டரி விற்றதை போலீசார் கண்டனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பிள்ளைத்தோட்டம் பள்ளத்தெருவை சேர்ந்த டோனி (வயது 40) என்பதும், பிரபல லாட்டரி சீட்டு வியாபாரியான இவர் ஆன்-லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதற்காகவே ஜெயமூர்த்தி ராஜா நகரில் வீட்டை சொந்தமாக வாங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் இவரை மங்காத்தா டோனி என்றே பலரும் அழைத்து வந்துள்ளனர்.
இதையடுத்து டோனியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப்-டாப், செல்போன் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை பணம் ரூ.19,600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X