search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    வில்லியனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    வில்லியனூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கோர்க்காடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோம்நாத் மாலிக். இவரது மகன் சரத் மாலிக் (வயது 19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு புதுவையில் தனியார் ரெக்சின் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இதற்கிடையே சரத்மாலிக் தனது வயதை விட 4 வயது அதிகம் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்யவும் முடிவு செய்தார். தனது விருப்பத்தை சரத்மாலிக் பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால், இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஆனாலும், சரத்மாலிக் தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதில் பிடி வாதமாக இருந்தார்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று இது தொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது தனது வார்த்தையை மீறி அந்த பெண்ணை திருமணம் செய்தால் வீட்டில் இருக்க வேண்டாம் என சரத் மாலிக்கை அவரது தந்தை சோம்நாத் மாலிக் எச்சரித்தார்.

    இதனால் மனமுடைந்த சரத்மாலிக் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் இருந்த எலிமருந்தை (வி‌ஷம்) எடுத்து தின்று விட்டார்.இதில் மயங்கி விழுந்த சரத்மாலிக்கை அவரது பெற்றோர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சரத்மாலிக் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோர்க்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    Next Story
    ×