என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 60 பேரிடம் ரூ. 3 கோடி மோசடி
Byமாலை மலர்1 April 2019 11:56 AM GMT (Updated: 1 April 2019 11:56 AM GMT)
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி மோசடி செய்து தலைமறைவானவர் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள உடுக்கம் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மதன் குமார் (34).
இவர் தனது பெயரை விநாயக் என மாற்றி சென்னையில் எவர் மேக்ஸ்மேன் பவர் சர்வீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.இவர் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 60 பேரிடம் தலா ரூ. 4.50 லட்சம் வீதம் ரூ. 3 கோடி வரை மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த வருடம் சென்னை போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மதன் குமார் தலைமறைவாகி விட்டார். அவர் உடுக்கம் பாளையத்தில் பதுங்கி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் கிடைத்தது.
உடனே அவர்கள் உடுக்கம் பாளையம் வந்தனர். அங்கு மதன் குமார் வீட்டை முற்றுகையிட்டனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட வேலூர் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பிரசாத், சதிஷ் ஆகியோர் கூறும் போது, பணம் தரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்றனர்.
அவர்களை போலீசார் சமரசப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள உடுக்கம் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மதன் குமார் (34).
இவர் தனது பெயரை விநாயக் என மாற்றி சென்னையில் எவர் மேக்ஸ்மேன் பவர் சர்வீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார்.இவர் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 60 பேரிடம் தலா ரூ. 4.50 லட்சம் வீதம் ரூ. 3 கோடி வரை மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த வருடம் சென்னை போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் மதன் குமார் தலைமறைவாகி விட்டார். அவர் உடுக்கம் பாளையத்தில் பதுங்கி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் கிடைத்தது.
உடனே அவர்கள் உடுக்கம் பாளையம் வந்தனர். அங்கு மதன் குமார் வீட்டை முற்றுகையிட்டனர்.
தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட வேலூர் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பிரசாத், சதிஷ் ஆகியோர் கூறும் போது, பணம் தரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்றனர்.
அவர்களை போலீசார் சமரசப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X