search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோடு அருகே பஸ் மோதி தொழிலாளி பலி
    X

    திருச்செங்கோடு அருகே பஸ் மோதி தொழிலாளி பலி

    திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிளும், பஸ்சும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
    எலச்சிபாளையம்:

    திருச்செங்கோடு அருகே கைலாசம்பாளையம் சுப்பராயன் நகர் பகுதியில் நேற்று தனியார் கல்லூரி பஸ் ஒன்று திருச்செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்செங்கோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், அந்த பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த தொழிலாளி வெற்றி (வயது 23) என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த ராஜா (37) படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×