search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலத்தில் 2 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
    X

    குற்றாலத்தில் 2 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது

    குற்றாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சாவுடன் நின்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    குற்றாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பாட்டப்பத்து பகுதியில் ஒரு பெண்ணும், 2 வாலிபர்களும் சந்தேகப்படும்படி பைகளுடன் சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களை மறித்தனர். அப்போது 2 வாலிபர்களும் பைகளை போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

    போலீசார் அந்த பைகளை சோதனையிட்ட போது, அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த வாலிபர்களுடன் வந்த ஆயிரப்பேரியை சேர்ந்த பார்வதி (வயது70). என்ற பெண்ணை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள். 
    Next Story
    ×