search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேத்துப்பட்டு அருகே திருமணமான 4 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
    X

    சேத்துப்பட்டு அருகே திருமணமான 4 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

    சேத்துப்பட்டு அருகே திருமணமான 4 நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து செய்யாறு உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஊத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் காயத்திரி (வயது 22). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து இருந்தார்.

    காயத்திரிக்கும், சின்னசந்தவாசல் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரது மகன் ராஜேஷ் (25) என்பவருக்கும் கடந்த 10-ந் தேதி திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும் காயத்திரி வீட்டில் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலையில் மணமகன் வீட்டில் இருந்து 5 பேர் ராஜமாணிக்கம் வீட்டுக்கு ராஜேசையும், காயத்திரியையும் அழைத்து செல்ல வந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த காயத்திரி குளித்துவிட்டு வருகிறேன் என கூறிவிட்டு சென்றவர். வீட்டில் இருந்த மாட்டு கொட்டகைக்கு சென்று மாடு கட்டும் கயிற்றில் தூக்கிட்டார்.

    இதைகண்ட உறவினர்கள் காயத்திரியை மீட்டு தேவிகாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், காயத்திரி இறந்துவிட்டதாக கூறினார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்துகொண்ட காயத்திரிக்கு திருமணமாகி 4 நாட்களே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×