என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடன்குடியில் விபத்தில் வியாபாரி பலி
Byமாலை மலர்13 March 2019 1:11 PM GMT (Updated: 13 March 2019 1:11 PM GMT)
உடன்குடியில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மாட்டு வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடன்குடி:
திசையன்விளை அருகே உள்ள அணைக்கரையை சேர்ந்தவர் மூக்காண்டி (எ) முத்துராமலிங்கம் (வயது 56). மாடு வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு இவர் தனது மொபட்டில் குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்றார். பின்னர் இரவில் அங்கு தங்கி விட்டு இன்று அதிகாலை மீண்டும் குலசேகரன்பட்டிணம்- உடன்குடி வழியாக திசையன்விளைக்கு சென்றார். திசையன்விளை மெயின் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவலறிந்த குலசேகரன்பட்டிணம் இன்ஸ்பெக்டர் ராஜபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான மூக்காண்டி (எ) முத்துராமலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X