search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்காரப்பேட்டை அருகே பூச்சி மருந்து குடித்து நர்சு தற்கொலை
    X

    சிங்காரப்பேட்டை அருகே பூச்சி மருந்து குடித்து நர்சு தற்கொலை

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே பூச்சி மருந்து குடித்து நர்சு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகேயுள்ள ரெட்டி வலசை பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகள் நந்தினி (வயது21). இவர் கோயமுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு வேலை பார்த்து வந்தார்.

    விடுமுறைக்காக ஊருந்து வந்து இருந்த நந்தினிக்கு தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் பூச்சி மருந்தை குடித்தார்.

    இதனை பார்த்த உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக நந்தினி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×