என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சவுகார்பேட்டையில் காரில் இருந்த 2 கிலோ தங்கம் பறிமுதல் - வாலிபரிடம் விசாரணை
Byமாலை மலர்8 March 2019 6:49 AM GMT (Updated: 8 March 2019 6:49 AM GMT)
சவுகார்பேட்டையில் காரில் இருந்த 2 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ராயபுரம்:
சவுகார்பேட்டை, என். எஸ்.சி.போஸ் சாலையில் நேற்று இரவு யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரத்தில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த காரில் சோதனை செய்தனர். அதில் இருந்த பார்சலை பிரித்து பார்த்த போது தங்க கட்டி இருந்தது.
இதையடுத்து காரில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் தங்க கட்டிக்கான எந்த ஆவணமும் இல்லை. 2 கிலோ தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக காரில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடந்து வருகிறது. தங்க கட்டி கடத்தப்பட்டதா? யாருக்கு கொடுக்க எடுத்து வரப்பட்டது? என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X