என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டை வாடகைக்கு எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது
Byமாலை மலர்6 March 2019 1:06 PM GMT (Updated: 6 March 2019 1:06 PM GMT)
பள்ளிப்பாளையம் அருகே வீட்டு வாடகை எடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள செங்குட்டுபாளையம் பகுதியில் ஒரு கும்பல் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்செங்கோடு டி.எஸ்.பி. சண்முகம் தலைமையில் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிற்குள் 18 பேர் பணம் வைத்து ரகசியமாக சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து, வீட்டிற்குள் புகுந்து 18 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், இவர்கள் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும், அப்பகுதியை சேர்ந்த விஷ்வநாதன் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து சூதாட்ட கிளப்பாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் 18 பேரையும் கைது செய்தனர். #tamilnews
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள செங்குட்டுபாளையம் பகுதியில் ஒரு கும்பல் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்செங்கோடு டி.எஸ்.பி. சண்முகம் தலைமையில் பள்ளிப்பாளையம் மற்றும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிற்குள் 18 பேர் பணம் வைத்து ரகசியமாக சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்து, வீட்டிற்குள் புகுந்து 18 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், இவர்கள் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும், அப்பகுதியை சேர்ந்த விஷ்வநாதன் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து சூதாட்ட கிளப்பாக பயன்படுத்தியதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் 18 பேரையும் கைது செய்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X